நாமல் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் உட்பட பல முக்கியமான அரச பிரமுகர்கள் திருகோணமலை கடற்படைத் தளத்தில் தஞ்சமடைந்துள்ளது.
இதனையடுத்து திருகோணமலையில் உள்ள கடற்படை முகாம் மக்களால் முற்றுகையிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்தே அங்கு மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் இளையோர் மற்றும் மக்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலை மறித்து போராட்டம் நடத்துகின்றனர்.
இலங்கை அரசியல் தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் முகமாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இன்று அதிகாலை அலரிமாளிகையில் இருந்து வெளியேறிய மஹிந்த ராஜபக்ச உட்படப் பலர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்தே விமானநிலையங்களும் முற்றுகையிடப்பட்டு போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.