
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
காலிமுகத்திடல் கலவரத்தையடுத்து ராஜபக்சக்கள் பாதுகாப்புத் தேடி ஒவ்வொரு இடமாக சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பான புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் திருகோணமலை கிழக்கு கட்டளை கடற்படை முகாமுக்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.