யாழில் கண்ணீர் விட்ட வைத்தியர்கள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருந்து இருப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், அடுத்து என்ன செய்வதுதென்று தெரியவில்லை என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மருத்துவர்கள் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கையில்:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவரச சிகிச்சைப் பிரிவில் பயன்படுத்தும் மருந்துகள், மயக்க மருந்துகள், கிளினிக்கில் பயன்படுத்தும் முக்கியமான மருந்துகள் அனைத்தின் இருப்பும் வெகுவாக குறைந்து விட்டது.

அதிலும் குறிப்பாக சத்திர சிகிச்சைக்காக பயன்படுத்தும் மருந்துகள்,விசர்நாய் கடிக்கு பயன்படுத்தும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.

ஊழல் மிக்க அரசின் முறையற்ற தலைமைத்துவத்தால் கல்வி, மருத்துவம், உணவு இவை மூன்றுமே கேள்விக்குறியாகியுள்ளது.

ஆகவே மூன்று வகையான சத்திர சிகிச்சைகளைத் தவிர ஏனைய சத்திர சிகிச்சைகளை நாம் தற்காலிமாக நிறுத்தியுள்ளோம்.

உயிர் காக்கும் அவரச சத்திரசிகிச்சை,நரம்பியல் தொடர்பான சத்திரசிகிச்சை,கர்ப்பிணிகளுக்கான சத்திரசிகிச்சை ஆகியவற்றை மட்டுமே இப்போது மேற்கொள்கின்றோம்.

இந்த சத்திர சகிச்சைகளை மேற்கொள்வதற்கே மருந்துகள் மிக மிக மிக தட்டுப்பாடாக உள்ளது.

மருத்துவ சேவைகளை எப்போதும் மட்டுப்படுத்த முடியாது,கட்டுப் படுத்த முடியாது.

ஆகவே மருந்து மற்றும் சுகாதார தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *