அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த 31 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்ட களம் நேற்றையதினம் வன்முறைக் கும்பலால் அங்கிருந்த கூடாரங்கள் மற்றும் தளபாடங்களை அடித்து நொறுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை முதல் கோட்டா கோ கம பகுதி மற்றும் ஜனாதிபதி செயலக வளாகத்தில் புதிதாக கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருவதோடு கறுப்பு கொடிகளும் ஏற்றப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது அந்த பகுதிக்கு ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பி வருகின்றனர்.

