பரிதாபமான நிலையில் மஹிந்த அணியினர்; கைலாசா அழைக்கும் நித்தி!

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பாகங்களில் ஈடுபட்டு வந்த ஆர்ப்பாட்டகாரர்கள் மீது நேற்று காடையர்கள் மேற்கொண்ட தாக்குதலையடுத்து நிலைமை தீவிரமடைந்தது.

இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரச தரப்பு உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலவுலகங்களை தீக்கிரையாக்கி தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் தற்போது வரை அரச உயர்மட்ட பல உறுப்பினர்களின் வீடுகள் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறாக இலங்கையில் நேற்று ஆரம்பமான வன்முறைச் சம்பவங்கள் ஊரடங்கிற்கு மத்தியில் இன்றும் தொடர்கின்றது.

இதேவேளை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தற்போது கைலாசா எனும் பெயரில் தனித் தேசமொன்றை அமைத்த நித்தியானந்தா. அங்கிருந்து தமது ஆதரவாளர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவுகளையும் ஆன்மீகம் சார் விடயங்கள் தொடர்பிலான பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றார்.

கைலாசாக்கென என கடவுச்சீட்டு, நாணயம், இணையதளம், முத்திரை, ஐநா சபையில் இடம் என அதிரடி காட்டிவரும் நித்தியானந்தா.

தற்போது தான் உருவாக்கிய கைலாசா தேசத்திற்கு வருமாறு இந்துமக்களுக்கு அழைப்பு விடுத்து முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார்.

குறித்த பதிவில் ஆதினங்களில் முழுநேரமும் தங்கியிருந்து சேவை செய்ய விரும்புபவர்கள் மட்டும் தொலைபேசி எண்ணை கமண்ட் செய்யவும். விரைவில் அழைக்கிறோம் என அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *