எவென்ரா கார்டன் சம்பவத்தில் கடற்படை வீரர் பலி!

நீர்க்கொழும்பு எவென்ரா கார்டன் உணவக வளாகத்தில் ஏற்பட்ட சம்பவமொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

29 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபர் மினுவங்கொடை நகரை சேர்ந்தவர் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபர் கடற்படையில் சிவில் அதிகாரியாக செயற்பட்டு வந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் உணவக வளாகத்தில் ஏற்பட்ட தீப்பரவலின் போது ஏற்பட்ட அதிக புகையினை சுவாசித்த காரணத்தினால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *