லிட்ரோ எரிவாயு லொறிகள் நிறுத்தப்படும் முற்றம் தீக்கிரை

கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் கனக ஹேரத்தின் வீடு மற்றும் லிட்ரோ எரிவாயு லொறிகள் நிறுத்தப்படும் முற்றத்திற்கு இனந்தெரியாத சிலர் தீ வைத்துள்ளனர்.

இந்த தீ வைப்பு காரணமாக வீட்டுக்கு மற்றும் மஹீபால ஹேரத்திற்கு சொந்தமான எரிவாயு லொறி முற்றத்திற்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

மூன்று எரிவாயு லொறிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்த எரிவாயு சிலிண்டர்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

பின்னர் நேற்றிரவு மாவனெல்லை தீயணைப்பு பிரிவின் வாகனங்கள் மற்றும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கேகாலை மொலமுரே மாவத்தையில் அமைந்துள்ள கனக ஹேரத்தின் வீட்டின் மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *