இன்று பிற்பகல் கட்சித் தலைவர்களின் சிறப்புக் கூட்டம்

கொழும்பு,மே 11

கட்சித் தலைவர்களின் சிறப்புக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜூம் தொழில்நுட்பம் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்தார்.

ஜூம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்சித் தலைவர்கள் சந்திக்கலாம் என்று சமூக ஊடகங்களில் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் இன்று புதன்கிழமை 3.00 மணிக்கு கட்சித் தலைவர் கூட்டம் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *