இலங்கையில் இருக்கும் தமது பிரஜைகளுக்கு சீனா விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் ஏற்பட்ட வன்முறைத் திருப்பங்களை தாம் “நெருக்கமாகப் பின்தொடர்வதாக” சீனா தெரிவித்துள்ளது.

எனவே இலங்கையில் பணிபுரியும் சீனப் பிரஜைகளை எச்சரிக்கையாகவும் ஆபத்துக்களுக்கு எதிராக பாதுகாப்பாகவும் இருக்குமாறு சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

பெய்ஜிங், இலங்கையில் வேகமாக வெளிவரும் நிகழ்வுகளை எச்சரிக்கையுடன் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், சீனா கையகப்படுத்திய தனது சொந்த ஊரான ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட, பெரிய அளவிலான சீன முதலீடுகளுக்கு வழி வகுத்த மகிந்த ராஜபக்சவின் இராஜினாமா குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சீன முதலீடுகளை ஊக்குவித்த ராஜபக்சவின் இராஜினாமா சீனாவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *