நேற்றுமுன்தினம் அலரிமாளிகை முன்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.
இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக வன்முறை சம்பங்கள் பதிவாகியிருந்ததுடன் உடனடியாக பொலீஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இவ்வாறான நிலையில் இன்று காலை முதல் நாடளாவிய ரீதியில் இராணுவ கவச வாகனங்களுடன் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


