நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

மேல் மாகாணங்களில் பலத்த மழையால் நான்கு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மழை பெய்யும் வேளையில் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *