பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை திருகோணமலைக்கு அழைத்துச் சென்றதாக பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் அலரி மாளிகையை சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையால், பிரதமர் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டாரென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் இயல்புநிலை திரும்பும் வரையில் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார் தங்கியிருப்பாரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.