
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேக நபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.