இன்று பிற்பகல் 2 மணிக்கு பின் எரிபொருள் விநியோகம்!

பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கிடைத்தவுடன் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் லிமிடெட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலை காரணமாக எரிபொருள் விநியோகம் திங்கட்கிழமை (மே 9) முதல் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைதியின்மை காரணமாக, எரிபொருள் தாங்கி ஊர்திகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் விநியோகத்தை தாம் உடனடியாக நிறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார

எந்தவொரு எரிபொருள் ஊர்தியையும் பொதுமக்கள் தாக்கினால், ஏற்படும் தீ குறிப்பிட்ட பகுதியில் பாரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.

இந்தநிலையில எரிபொருள் பவுசர்களை விடுவிப்பதற்கான பாதுகாப்பு அங்கீகாரம் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *