<!–
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக மக்களின் வாழ்க்கையை முன்னெடுப்பதற்காக பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய அமைச்சுகளுக்கு மூன்று செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முதல் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி, பாதுகாப்பு அமைச்சு – ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சு – ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், நிதி அமைச்சகம் – கே.எம் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் தற்போது வரை அந்த அமைச்சுக்களில் செயலாளர்களாக பணியாற்றி வருகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


