காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம்; அனைவரது கவனத்தையும் ஈர்த்த வெளிநாட்டுப்பெண்!

காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபடுள்ளவர்கள் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், அவ்வழியாகச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான பெண் ஒருவரும் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டார்.

இதன்போது மகிந்தவை கைது செய் எனும் பதாகையை அவர் கையில் வைத்திருந்தார்.

இதையடுத்து, குறித்த வெளிநாட்டு பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், மஹிந்த கொழும்மை விட்டு ஓடி திருகோணமை கடற்படை முகாமில் ஒளிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *