
நாடு வழமைக்குத் திரும்பும்வரை எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடப்போவதில்லை என்று தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்துக்கு எதிராக தென்பகுதியில் பெரும் வன்முறைகள் வெடித்துள்ள நிலையில், தமது பாதுகாப்புக் கருதி, சேவையை நிறுத்தியுள்ளதாக, பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.