சில நிபந்தனைகளின் கீழ் ஆட்சி அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஒப்புக் கொண்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஐக்கிய மக்கள் சக்தி இதனைத் தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நிபந்தனைகளின்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ராஜினாமா செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும், மேலும் குறுகிய காலத்திற்கு அமைக்கப்படும் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தில் ஜனாதிபதி தலையிடக்கூடாது என தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியும், ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
