மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ, கொடபல பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் ருவான்வெல்ல மற்றும் எட்டியாந்தோட்டை பிரதேசங்களுக்கும் நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ காரேலே, இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, களவானஎஹலியகொட, இரத்தினபுரி நிவித்திகல ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *