வடமாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நண்பகல் 12 மணி வரை முன்னெடுக்கப்படுமென மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.
மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண கல்வி பணிப்பாளர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.