மலேசியாவுக்குத் தப்பிச் சென்றாரா பிள்ளையான்?

அண்மையில் அமைச்சராகப் பதவியேற்ற பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மலேசியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்று இன்று (வியாழக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது.

அங்கிருந்து ஐரோப்பிய நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அதன்படி, மூன்று ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்களை அதற்கான வசதிகளை செய்து தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல குற்றச் சாட்டுகளில் சிக்கி சிறையில் இருந்த அவர், சமீபத்தில் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டு அமைச்சராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *