
முள்ளிவாய்க்கால் நினைவு வார ஆரம்பநாளான இன்று, நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள, தியாகி திலீபன் நினைவிடத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முள்ளி வாய்க்கால் கஞ்சி சமைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது உறவுகள் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவுக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
எங்கள் உறவுகள் எங்கே . அவர்களை கொன்றுவிட்டீர்களா.பதில் கூறுங்கள். எங்கள் வயிறு எரிகிறது. நாடும் பற்றி எரிகிறது. அம்மாக்களின் அழுகை சும்மா விடாது. இது தான் கடைசி சந்தர்ப்பம். இனியாவது அரசியல்வாதிகளே திருந்துங்கள். எங்களை வைத்த பிழைப்பு நடத்த வேண்டாம் என்றனர்.
வீடியோ இணைப்பு