சர்வதேச தாதியர் தினம் இன்று

கொழும்பு, மே 12

சர்வதேச தாதியர் தினம் இன்றாகும். சுகாதார சேவையின் மகத்துவம் அன்றும் இன்றும் மிக முக்கிய சேவையாக காணப்படுகின்றது.

புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) அறிமுகப்படுத்திய தாதிச் சேவை, உலக உயிர்வாழ்விற்கான இன்றியமையாத காரணியாக அமைந்துள்ளமையே அதற்கான காரணமாகும்.

நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த Florence Nightingale-இன் பிறந்த நாளான மே 12ஆம் நாளை சிறப்பாக நினைவுகூரும் வகையில் இன்றைய நாளில் சர்வதேச தாதியர் தினம் அனுஷ்ட்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

1899ஆம் ஆண்டில் சர்வதேச தாதியர்களுக்கான பேரவை எடுத்த தீர்மானத்திற்கமைவாக ஆண்டு தோறும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது.

1939 ஆம் ஆண்டு முதல், முறையான தாதியர் சேவையை ஸ்தாபித்ததன் மூலம் நோயுற்றவர்களை இரவும் பகலும் கவனித்துக்கொள்ளும் தாதியர்களின் தலைமுறையை கௌரவிக்கும் வகையில் இலங்கையும் தாதியர் தினத்தை கொண்டாடுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *