ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்றில் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
17ஆம் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் மீதான “விருப்பின்மை” (நம்பிக்கையில்லா) தீர்மான விவாதத்தை நிலையியல் கட்டளைகளை ஒத்திவைத்து நடத்த இன்று (12) காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது..
நாடாளுமன்றம் அன்று கூடும்போது முதல் நடவடிக்கையாக, பிரதி சபாநாயகர் தெரிவும், பின்னர் நிலையியல் கட்டளைகள் ஒத்திவைப்பும், அதையடுத்து ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா தீர்மானமும் விவாதிக்கப்பட்டு இறுதியில் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.