ஜோன்ஸ்டனுக்குச் சொந்தமான கால்நடைப் பண்ணை தீக்கிரை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கால்நடைப் பண்ணை ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

மாத்தளை – லக்கல வஸ்கமுவ தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள பண்ணைக்கு நேற்று முன்தினம் இரவு தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் பண்ணையில் ஆடுகள், பன்றிகள் மற்றும் முயல்கள் வளர்க்கப்படுகின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் விலங்குகளை விடுவித்து தீ வைத்து எரித்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

பூங்காவின் எல்லையில் 15 ஏக்கர் பரப்பளவில் இந்தப் பண்ணை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *