
கொழும்பு, மே 12
மகிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெராண்டோ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், குறித்த இருவருக்கும் எதிராக இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது