ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களின் மீட்பர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மக்களின் தீர்மானத்தை புறந்தள்ளி அரசியல் முடிவுகளை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இணைந்து உருவாக்கும் சதியை பொதுமக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ரணில் கோட்டாபய ராஜபக்சவை நம்புகிறார், இவர்களின் சதிக்கு இந்த நாட்டில் உள்ள எந்தவொரு பிரஜையும் இம்முறை வீழ்ந்துவிடமாட்டார் என திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஓமல்பே சோபித்த தேரர், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட சமயத்தலைவர்கள் ரணிலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.