ரணில் தனது தொகுதியில் கூட இம்முறை வெற்றி பெறவில்லை! சுமந்திரன் அதிருப்தி

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

நாளிதலொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே எம்.ஏ.சுமந்திரன் எம்.பி இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி முற்றாக சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டார், மக்கள் அவர் வீட்டிற்கு செல்ல விரும்புகின்றனர்.

ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா தீர்மானப் பிரேரணைக்கு எதிராக நாடாளுமன்றம் விரைவில் முடிவை காண்பிக்கும்.

ரணில் விக்ரமசிங்கவின் தெரிவில், ஆரம்பத்திலிருந்தே தற்போதைய பாராளுமன்றத்தில் சட்டபூர்வத்தன்மை இல்லை. அவர் தனது தொகுதியில் கூட இம்முறை வெற்றி பெறவில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *