நாட்டில் கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் எரிபொருளை வழங்குமாறு கோரி பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றையதினம் அதிகாலை முதல் எரிவாயுவை வழங்குமாறு கோரி பொதுமக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் கொழும்பு – நீர்கொழும்பு வீதி மஹாபாகே சந்தியுடனான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.