எரிபொருள் விலை உயர்வை ஈடு செய்ய ஸ்பெயின் அரசு பல்வேறு கொள்கைகளை வகுத்துள்ள போதிலும் , சில சிக்கல்களையும் சந்தித்து வருகிறது .
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் மற்றும் கொரோனாத் தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் , மார்ச் மாத இறுதியில் வெளியிட்ட அறிவிப்பின்படி , ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 20 செண்ட் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது . இந்த மானியத்திற்காக அரசு 15 செண்ட் செலுத்தும்
என்றும் பெற்றோல் நிலை யங்கள் 5 செண்ட் செலுத்த வேண்டும் என்றும் அறிவி க்கப்பட்டிருந்தது .
அரசின் இந்த கொள்கை முடிவு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . ஆனால் சிறு மற்றும் நடுத் தர பெற்றோல் நிலையங் களுக்கு இதனால் பெருத்த இழப்பு ஏற்படும் என கண்ட னங்கள் எழுந்தன .
இதனால் 350 இற்கும் அதிகமான பெற்றோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் இதே நிலை தொடர்ந்தால் நாடு முழுவதும் சுமார் 3,000 முதல் 4.000 பெற்றோல் நிலை யங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் . என அந் நாட்டின் எரிபொருள் விநி யோகஸ்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர் .