ரணிலுக்கு ஆதரவு வழங்க தயாரில்லை! சுகந்திர கட்சி தீர்மானம்

புதிய அமைச்சரவையில் பங்கேற்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், மத்திய குழுவில் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர், அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ச்சியாக சர்வகட்சி அரசாங்கத்தை கோரியிருந்ததுடன், தேசிய சபையொன்றின் ஊடாக அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வதற்கான அவர்களின் முன்மொழிவுகளுக்கு இணங்க புதிய பிரதமரின் நியமனம் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *