சமீபத்தில் காலிமுகத்திடலில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் தனியார் பஸ்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவமானது ஒரு பயங்கரவாத செயற்பாடாகும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இந்த சம்பவம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.