நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக கிராமிய வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஊரடங்குச் சட்டம் காரணமாக மத்திய மருந்துக் கிடங்குகள், கிராமிய வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் மற்றும் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் ஏற்கனவே இருக்கும் நிலைமைகளுக்கு நாளாந்தம் சிகிச்சையைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
கிராமப்புற மருத்துவமனைகள் இயங்கினாலும் பல அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில்லை.
பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்கான வசதிகளை உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்க சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிகிச்சை மையங்கள் திறந்திருக்க வேண்டும்.
நன்கொடையாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு மருந்து தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்கான உதவிகளை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.