நாட்டை திறந்தாலும் சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும்- ஹேமந்த ஹேரத்!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தாலும், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறைவடையவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைவடைந்திருந்தாலும், இன்னமும் நாளொன்றுக்கு ஆயிரம் வரை தொற்றாளர்கள் பதிவாகின்றனர்.

அதேபோல், நாட்டில் பல இடங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

எனவே, இந்நிலைமை தொடர்பில் நூறு வீதம் திருப்தி கொள்ள முடியாது எனவும், வைரஸ் பரவுவதற்கான அவதானம் குறையவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, நாட்டை திறப்பதாக இருந்தாலும் அதனை படிமுறை ரீதியாகவே செய்ய வேண்டும்.

அதேபோல சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும் என்றும், அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply