
நாடாளுமன்ற ஊழியர்களின் வாகனங்களின் எரிபொருளுக்கான 56 லட்சம் ரூபாய் பணம் செலுத்தப்படாமையால் நாடாளுமன்றத்தின் அனைத்து பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.நாடாளுமன்ற போக்குவரத்து சேவைக்காக 9 இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளும் 5 தனியார் பேருந்துகளும் ஈடுபடுகின்றன. அந்த பேருந்துகளுக்கான எரிபொருள் கட்டணமாக 56 லட்சம் ரூபாய் செலுத்தப்படாமையால் அவற்றுக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.