கொரோனா தொற்று உறுதியான 642 பேர் அடையாளம்

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 642 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 515,234 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 46 ஆயிரத்து 416 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை,கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 743 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 456,087 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply