ஆயுதப்படைகளின் நவீன மயமாக்கல் குறித்து ராஜ்நாத் சிங் வலியுறுத்து!

ஆயுதப்படைகளின் நவீன மயமாக்கலை உறுதி செய்வதற்காக ஒன்றிணைந்த சூழலை உருவாக்கியிருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இந்திய இராணுவ உற்பத்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் தங்களது இராணுவத்தை நவீனமயமாக்குவதில் கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

அதிகரித்து வரும் பாதுகாப்பு விடயங்கள், எல்லைப் பூசல்கள் போன்றவற்றினால் இராணுவ உபகரணங்களின் தேவை அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply