சீன சேதனப் பசளையில் பக்டீரியா காணப்படுவது இரண்டாவது சோதனையிலும் உறுதி

<!–

சீன சேதனப் பசளையில் பக்டீரியா காணப்படுவது இரண்டாவது சோதனையிலும் உறுதி – Athavan News

சீனாவில் இருந்து நாட்டிற்கு கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டிருந்த சேதனப் பசளையில் பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா காணப்படுவதாக இரண்டாவது தடவை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, இதனை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான அனுமதியை விவசாயத் துறை நிராகரித்துள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே இதுகுறித்து உறுதி செய்யப்பட்டதாக அவர் ஆங்கிழ உடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.


Leave a Reply