’வீட்­டுத்­திட்ட விவ­கா­ரம்’ பணம் பறிக்­கும் கும்­பல்­கள் :மக்­களே மிகுந்த அவ­தா­னம் !

’வீட்­டுத்­திட்ட விவ­கா­ரம்’ பணம் பறிக்­கும் கும்­பல்­கள் :மக்­களே மிகுந்த
அவ­தா­னம் !

வீட்­டுத்­திட்­டத்­துக்கு தெரி­வான பய­னா­ளி­க­ளுக்கு அழைப்பை மேற்­கொண்டு மோச­டி­யான முறை­யில் பணம் கறக்­கும் முயற்­சி­யில் சிலர் ஈடு­பட்டுள்ளனர் எனத்
தெரிவிக்­கப்­ப­டு­கின்­றது.

பிர­தேச செய­லக அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர் என்று தெரி­வித்து பய­னா­ளி­க­ளு­டன் ஒரு­வர் உரை­யா­டு­கின்­றார். ‘வீட்­டுத்­திட்­டத்­துக்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளீர்­கள். வீட்­டுத் திட்­டத்­துக்­கு­ரிய நிதி முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னர் முத்­தி­ரைக் காசு செலுத்­த­வேண்­டும். அந்­தப் பணத்தை வங்­கிக் கணக்கு இலக்­கத்­துக்கு அனுப்­ப­வும்’ என்று தெரி­வித்து வங்­கிக் கணக்கு இலக்­கத்­தை­யும் அனுப்பி வைக்­கின்­ற­னர்.

வீட்­டுத் திட்­டத்­துக்கு தெரிவு செய்­யப்­பட்ட பய­னா­ளி­கள் எந்­தப் பணத்­தை­யும் முத்­தி­ரைக் காசு என்று செலுத்­தத் தேவை­யில்லை. அப்­ப­டி­யொரு நடை­மு­றையே இல்லை. இது பணம் கறக்­கும் கும்­பல்­க­ளின் நட­வ­டிக்கை என்று வீட்­டுத்­திட்­டத்­து­டன் தொடர்­பு­டைய அதி­கா­ரி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

Leave a Reply