அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் மீதான 100% வைப்பு நிதி எல்லையை நீக்க தீர்மானம் – கப்ரால்

<!–

அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் மீதான 100% வைப்பு நிதி எல்லையை நீக்க தீர்மானம் – கப்ரால் – Athavan News

அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 100 சதவீத வைப்பு நிதி எல்லையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

மேலும் இறக்குமதியாளர்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் தேவையானவற்றை மற்றும் இறக்குமதி செய்யுமாறும் மத்திய வங்கியின் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Leave a Reply