இலங்கை அரசாங்கத்திற்குள் சதி திட்டம் வளர்ச்சியடைந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.
மேலும், அரசாங்கத்திற்குள் ஒரு கதையை சொல்லும் குழு, வெளியே வந்து இன்னொரு கதையைச் சொல்கின்றார்கள்.
இந்தச் சதிகாரர்களுடன் அரசாங்கம் முன்னோக்கி செல்ல முடியாது என்றும் இந்த சதிகளை இந்த சதிகாரர்கள் நிறுத்த வேண்டும் அல்லது இந்த சதித்திட்டங்களை தீட்டும் சதிக்காரர்களை ஒழித்துவிட்டு அரசாங்கம் முன்னேற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


