கணவரை பிரிந்து விட்டதாக சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

நடிகை சமந்தா, தனது கணவரான நடிகர் நாக சைதன்யாவை பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை,  நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.

நடிகை சமந்தா மற்றும்  நடிகர் நாகசைதன்யா இருவரும் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் இருவரும் கடந்த 10  ஆண்டுகளாக நட்பாக பழகி வருகிறோம்.

எமது நட்பு எங்கள் திருமணம் வரை சென்றது. ஆனாலும் தற்போது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்கள் முடிவுக்கு ரசிகர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் மதிப்பு கொடுக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்” என பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply