யாழ்ப்பாணத்துக்கு இந்திய வெளியுறவுச் செயலாளர் வருகை!

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று மாலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.

இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணம் மாநகரில் அமைக்கப்பட்ட கலாசார மண்டபத்தை அவர் பார்வையிட்டார்.

நேற்று மாலை இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலர், ஒக்டோபர் 5ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பார்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இலங்கை அரசியல் உயர்மட்டப் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.

Leave a Reply