கல்வி அமைச்சின் முன் இடம்பெற்ற போராட்டம் : பொலிஸார் விசாரணை

பத்தரமுல்லையில் நேற்று (வெள்ளிக்கிழமை) கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகின்றது.

இதில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது நாரஹேன்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

போராட்டக்காரர்களால் கல்வி அமைச்சின் உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, சம்பவம் தொடர்பில் கடுவெல நீதவான் நீதிமன்றில் இன்று (11) முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *