
இனந்தெரியாத நபரின் கத்திவெட்டில்
இருவர் படுகாயம்!
பொன்னாலையில் இனந்தெரியாத நபர் ஒருவரின் கத்திவெட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றைய தினம் இரவு நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த 57 மற்றும் 41 வயதான இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.