குடியரசுத் தலைவர் தேர்தல் : தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற அதிக வாய்ப்பு

குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் சோனியா காந்தி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட எந்தப் பெயரையும் காங்கிரஸ் கட்சி அறிவிக்கவில்லை என்றாலும் வேற்றுமைகளை மறந்து நாட்டின் நலன் கருத வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 15 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், கெஜ்ரிவால், உட்பட 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே, தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு தேவையான ஆதரவு இருப்பதாகவும் வெற்றிக்கு சாதகமான சூழல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *