
ரம்புக்கனை பகுதியில் ரயிலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ரம்புக்கனை வைத்தியசாலை சந்திக்கு அருகில், ரயில் பெட்டிக்குள் இருந்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என ரயில்வே நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.
ரம்புக்கனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிற செய்திகள்