65,000 மெற்றிக் தொன் யூரியா உரம் ஜூலை 10 இல் நாட்டுக்கு!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட யூரியா உரக் கப்பல் ஜூலை 10 அல்லது 11 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

65,000 மெற்றிக் தொன் யூரியாவை ஏற்றிக்கொண்டு ஜூன் 28 ஆம் திகதி ஓமானில் இருந்து கப்பல் புறப்பட உள்ளது. அதற்கமைய, ஜூலை 15ஆம் திகதி முதல் விவசாயிகளுக்கு உரங்கள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், இலங்கை விவசாயிகள் எதிர்நோக்கும் உரத் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு யூரியா உரத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *