வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

நாளை(13) திங்கள் கிழமை வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் மட்டுப்படுத்தப்பட்டளவில் தமது சேவையை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை எதிர்வரும் 14ஆம் திகதி பூரணை விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் மூடப்படும் அதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகத்தின் வழமையான சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *