மன்னார் வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கத்திக்குத்து – ஒருவர் கைது!

<!–

மன்னார் வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கத்திக்குத்து – ஒருவர் கைது! – Athavan News

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சைப் பெற்று வந்த மன்னார் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் மீது இவ்வாறு கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *